கமலஹாசனை தைத்த முள்.
January 23, 2010 at 2:10 pm 6 comments
எழுத்தாளர் முத்து மீனாள் எழுதிய சுயசரிதை “முள்” கடந்த வருடம் வெளியாகி பரவலான கவனத்தைப்பெற்றது. இது வரை தமிழில் இப்படி ஒரு சப்ஜெக்டை யாரும் தொட்டதில்லை என்று சொல்லலாம். அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு “THORN” (மொழிபெயர்ப்பு சுபஸ்ரீ தேசிகன்.) நேற்று வெளியிடப்பட்டது. இந்நூலை வெளியிட்டு பேசிய கமலஹாசன் “இந்நூல் தன் நெஞ்சில் தைத்த முள். வெறும் ஒரு இலக்கியபடைப்பாக இந்நூலை பார்க்கவில்லை சமூகத்தில் இருக்கிற தீமைகளையும், கருணையையும் நேர்மையாக எளிமையாக வெளிப்படுத்தி இருக்கிறது” என்று கூறினார். ஜப்பானின் நிப்பான் ஃபவுன்டேஷனின் உதவியுடன் இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. எனது நண்பர் எழுத்தாளர் அய்யனார் (முத்துமீனாளின் கணவர்) “மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ்” மூலம் இந்நூலை வெளியிட்டிருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். இந்நூலுக்கு அட்டை வடிவமைத்தது அடியேன் தான் என்பது அடிஷனல் தகவல்.
நினைவுப்பரிசாக ஒரு நூலை நான் பெற்றுகொண்டேன். (நடுவில் முத்துமீனாள்.)
Entry filed under: tamil advertising. Tags: kamal, mull, thorn.

1.
யுவகிருஷ்ணா | January 23, 2010 at 3:09 pm
வாழ்த்துகள் சந்தோஷ்!
நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். நீங்கள் ரொம்ப ‘பிஸி’யாக இருந்ததால் பேசமுடியவில்லை
2.
ashok | January 25, 2010 at 5:33 pm
Hi Santhosh Anna,
Kalakuringa…….ennaiyum kuptuirukkalamla……..all the best
- Ashok
3.
Nathan & Nandhini | January 26, 2010 at 2:08 pm
Great Santosh! Ulaganaayagan kaiyaal ninaivuparisu vaangurathu unmayilaeyae periya vishayam! We wish you give a stunning identity for Kamal hasan’s book one day.
4.
arunkumar | March 2, 2010 at 7:56 pm
kalakuringa ponga
5. 2010 in review « | January 2, 2011 at 1:55 pm
[...] கமலஹாசனை தைத்த முள். January 2010 4 comments 4 [...]
6.
saravanan | April 20, 2012 at 7:45 pm
great machi