கதை மாதிரி ஒரு கதை.
February 3, 2011 at 2:26 am 6 comments
ரொம்பநாட்களாக காசிக்குப்போகணும் என்று ஆசை. ஆனந்தும் நானும் அடிக்கடி பயணங்கள் பற்றி திட்டமிடுவோம் ஆனால் நட்க்காது இம்முறை அப்படி அல்ல. ஒரு மாதம் அலுவலக விடுப்பு எடுத்துகொண்டு கிளம்பிவிட்டோம். நீன்ட ரயில் பயணம் கொஞ்சம் சோர்வாக உனரச்செய்தாலும் காசியை சென்று சேர்ந்ததும் உற்சாகமாகிவிட்டது.
ஒரு பழைய விடுதியில் அறை எடுத்து தங்கிக்கொண்டோம். பைப்பில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு விஸ்வநாதர் ஆலயத்துக்கு போகும் வழியில் ஒரு வட இந்தியரின் கடையில் பூரியும் கிழங்கும் சாப்பிட்டோம். எதிர்படும் திசையில் எல்லாம் சடைபிடித்த தாடி மீசையுடன் சாமியார்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். வயதானவர்களை அழைத்துகொண்டு வரும் டூரிஸ்ட் குடும்பங்கள். காசியிலேயே ஏதாவதொரு மடத்தில் தன் கடைசி காலத்தை கழிக்க வரும் முதியவர்கள். கூட்டத்தில் என்னவெல்லாமோ விற்க அலையும் மனிதர்கள். மாடுகள், நாய்கள், கடவுள்கள்.
போதை ஏற்றியது போல இருந்தது ஊர் சுற்றல். இரவானதும் மறுபடி அறைக்கு வந்து சேர்ந்தோம். குளிர் பரவியிருந்தது. ஆனந்துக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை கிடையாது. சாமியார்களை பார்த்தால் கிண்டல் வேறு. எனக்கு பெரிதாக பக்தி கிக்தி எல்லாம் இல்லையென்றாலும் இந்த மாதிரி கோயில்கள், விழாக்கள், சாமியார்கள், காசி இவற்றின் மேல் ஒரு சுவாரஸ்யம் உண்டு.
இணையத்தில் ஏதாவது இந்து பிலாசபி, ஞானம், போன்ற விஷ்யங்களை அறைகுறையாக படித்து விட்டு அதை பற்றி சுத்தமாக எதுவும் தெரியாத நண்பர்களிடம் பேசி பீலா விட்டு ஒரு த்துவக்களை காட்டிக்கொள்வதில் அல்ப சந்தோஷம்.
” மச்சான் நாளைக்கு எவனாவது தமிழ் தெரிஞ்ச சாமியாருங்கோ எவனையாவது கண்டுபிடிச்சு, கொஞ்சம் தத்துவம், மார்க்கம் பத்தி எல்லாம் கேள்வி கேட்கணும்டா” என்றேன் ஆனந்திடம். “யேன் அப்பிடியே சாமியாரா செட்டில் ஆயிடலாம்ணு பாக்கியா” என்றான் அவன். “சும்மா இங்க என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்ணு தான்” ” என்ன தெரிஞ்சுக்கிறதுக்கு. ஜாலியா இருக்கானுங்கப்பா இந்த சாமியாருங்க. சரக்கு, டோப்பு, எதுக்குமே பஞ்சமில்ல போல”
காலையில் எங்கள் விடுதிக்கு பக்கதிலிருந்த டீக்கடையில் ஆன்ந்த் தன்க்கு தெரிந்த “ஏக், கியா, துல்கனியே” போன்ற இந்தி வார்த்தைகளை வைத்து யாராவது தமிழ் சாமியார் தெரியுமா என்று கேட்டான். ” நீ, தமிழு, இட்லி” போன்ற அவனுக்கு தெரிந்த தமிழ்வார்த்தைகளை வைத்து கடைக்காரன் பதில் சொல்லி கொண்டிருந்தான். ஒரு முடிவும் வந்தபாடில்லை.கடைசியில் கடைக்காரன் ஒருவாறாக புரிந்துகொண்டு ஒரு பையனை அழைத்தான். அவன் கொஞ்சம் நல்லா தமிழ்பேசினான். சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பானிபூரி விற்றபோது தமிழ் கற்றுகொண்டதையும் கூறினான்.”உங்கள்கு தமிழ் சாமியாரெ பாக்ணும். நம்ம கூட வாங்கோ காட்டும்” என்றபடி நடந்து ஒரு சந்துக்குள் கூட்டிபோனான்.
ஒரு பழைய அய்யர் வீடு மாதிரி தெரிந்த வீட்டின் திண்னையில் ஒருத்தர் உட்காந்திருந்தார். பார்க்க பிச்சைகாரனா? சாமியாரா என்று வித்தியாசம் தெரியவில்லை. பக்கத்திலும் சுற்றுமுற்றும் இன்னும் சில வயதான சாமியார்கள் படுத்தொகொண்டும், குத்தவைத்து உட்காந்துகொண்டும் வருவோர் போவோர்களை பாத்துகொண்டிருந்தார்கள்.”அதோ அவரு தமிழு தான்” என்று கைநீட்டி காட்டிவிட்டு அந்த பயைன் மறுபடி ச்ந்தில் நுழைந்து திரும்பி போனான். நானும் ஆனந்தும் அவரை பாத்து நடக்கத்துவங்கினோம்.
நாங்கள் நெருங்கி வரவும் அவர் எங்களை மேலும் அருகில் அழைப்பதுபோல மெல்ல தலைசைத்து லேசாக சிரித்தார். அழுக்கான தாடிக்கும் மீசைக்கும் நடுவில் கறைபடிந்த வாய் லேசாக திறந்து தான் சிரித்தார். நல்ல திடகாத்திரமாகத்தான் தெரிந்தார். அம்பது வயசுக்கு மேல் கண்டிப்பாக இருக்காது.
“சாமி நீங்க தமிழா” என்றேன். “ஆமா, நீங்க நம்மூர் காரங்களா? பாக்கும்போதே தோணிச்சு. தமிழ்நாட்டுல எங்கேருந்து வாரீங்க” என்றார். “சொந்த ஊரு திருனெவேலிபக்கம். இப்பம் இருக்கிரது சென்னையில தான்” என்றேன். ஆனந்த் பெரும்பாலும் பதில் சொல்லுவதில்லை. அவனுக்கு அவ்வளவு ஆர்வம் இருப்பதுபோலவும் தெரியவில்லை. “சாமீ, சும்மா இங்கே காசியெல்லாம் சுத்திபாக்கலாம்னுட்டு தான் வந்தோம். அப்டியே சாமியாருங்க கிட்ட பேசலாம்னா எங்களுக்கு ஹிந்தி தெரியாது அதான் ஒரு தமிழ் சாமியாருன்னா வசதியா இருக்குமில்லியா அதான் உங்கள தேடிபிடிச்சோம்” என்றவாறு” சாமி ஏதாவது சாப்பிடுறீங்களா எதாவது வாங்கிட்டு வரட்டுமா” என்றேன்.” இல்ல தம்பிங்களா காலையில சாமி ஸப்பிட்டாச்சு.” என்ற படி பையிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தபடி” சரி சாமியாருங்க கிட்ட என்ன பேசணும்” என்றார். “இல்ல சாமி சும்மா சாமியாருங்க அனுபவத்த பத்தி கேட்கலாம்ணு தான்…” என்றேன். ஆனந்த் இப்போது லேசாக தலையாட்டி ஆமோதிப்பதுபோல இருந்தது. “சாமிக்க பேரு என்னது” என்றேன்
“தம்பி என் உண்மையான பேரு சேகர்பாபு. சாமியாராகணும்னெல்லாம் பெரிசா நினைச்சதில்லை. நமக்கும் சொந்த ஊரு திண்டுக்கல் பக்கம் தான். ஆனா சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டேன். சொந்தம்னெல்லாம் யரும் கிடையாது. ஏதேதோ வேலை செஞ்சேன். பிறகு வாழ்க்கையில ஒரு வெறுப்பு வந்திடிச்சு. டெய்லி என்ன வேலை செஞ்சு என்னான்னு ஒரு நினைப்பு. வடபழனி கோயில் பக்கம் சுத்துவேன். நிறைய பிச்சைக்காரங்க, சாமியாருங்க கிட்ட பழக்கம். நானும் மெல்ல கோவிலாண்ட பிச்சைகாரங்க கூட சேந்து படுத்துப்பேன். பிறகு மெல்ல பிச்சை எடுக்கவும் ஆரம்பிச்சேன். அப்ட்யே ஜாலியா தான் போய்ட்டு இருந்த்து. திடீர்னு ஒரு ஒரு சினிமா பட சூட்டிங்க் அதுக்கு நிறைய பிச்சைக்காரங்களும் சாமியாருங்களும் வேணும்னு கேட்டதா எவனோ சொன்னான். அதுவும் சாமியாருங்கள பத்தியும் பிச்சைக்காரங்கள பத்தியும் எடுக்கபோற சினிமான்னு சொன்னாங்க. யாரோ பாலான்னு ஒரு டயரக்டர் பேர சொன்னாங்க. காசும் கிடைக்கும் அப்டியே சூட்டிங்க்ல நடிகருங்களையும் பாக்கலாம்ணு ஜாலியா கிளம்பி போனோம். பாத்தா சூட்டிங் மட்ராசில இல்ல காசியில தான்னுட்டு சொன்னாங்க. எல்லாரையும் ட்ரெயினுல கூட்டிபோவாங்கண்ணு சொன்னாங்க. கொஞ்சம் பேர் தூரமா போணுமே நமக்கு வடபழனியே போதும்னுட்டு திரும்பி போயிட்டானுங்க” ” மச்சி நான் கடவுள்டா” என்று நாங்கள் ஆச்சரியபட எடுத்தொக்கொண்ட இடைவெளியில் சாமி பீடியை ஒரு இழு இழுத்துவிட்டு மெலும் தொடர்ந்து.
” அப்புறம் நாங்க நிறையபேரு சென்டரல் இல்ல சென்டரலு அங்கேருந்து ட்ரெயினுல ஏறி இங்கே காசிக்கு வந்திட்டோம். ஷூட்டிங் நடந்தப்போ சாப்பாடு காசு எல்லாம் கிடைச்சுது.”
ஆனந்த் இன்ப அதிர்சிக்கு ஆட்பட்டு சில நிமிடங்கள் கடந்திருந்தது. காரணம் அவன் ஒரு பாலா ரசிகன். நானும் தான்.
” சாமி பாலா உங்க கிட்ட பேசினாரா, நீங்க எந்த சீன்ல வந்தீங்க” என்றோம் படபடப்புடன்.” பாலா தம்பி நல்ல மனுஷனப்பா, சாமியாருங்க மாதிரியே நல்லா புகையை இழுத்து இழுத்து வுடும். மண்டையோடு கோர்த்த மாலை எல்லாம் கூட போட்டிருக்கும். அந்த ஆரியா தம்பிதான் எனக்கு ஆருன்னு அடையாளம் தெரியல். ஏதோ புது புள்ளையாம்ல. ஆனா அது கூட சாமியாருங்க மாதிரியே பயங்கரமா தாடி எல்லாம் வச்சுகிட்டு எங்க கூட தான் சில சமயம் சுத்திகிட்டு திரிஞ்சுது. அதுவும் சாமியாராத்தானே நடிச்சிருந்தது. அது என்னமோ தலைகீழா ஒரு ஆசனம். கைய தலைக்கு பின்னால கட்டிட்டு காலை மேல தூக்கி தலைகீழா நின்னுட்டு. ரொம்ப கஷ்டப்பட்டதுப்பா.” இன்னொரு இழு இழுத்ததும் பீடி பெரும்பாலும் கரைந்து போனது. நெருப்பை தரையில் தேய்த்து அணைத்து தூக்கி எறிந்தார் சாமி.
“ஹீரோயின் புள்ள நடிக்க வரும்ணு பாத்தா கடைசி வரைக்கும் வரலப்பா. அதெல்லாம் ஊருல தான் சூட்டிங்கின்னு சொல்லிட்டாங்க. ஆங் அப்புறம் உங்க நகர்கோவில் பக்கம் தானாம் ஒரு எழுத்தாளரு. அவரு பேரு கூட ஏதோ மோகன்னு வருமேப்பா.”
“சாமி அது ஜெயமோகன்.”
“ஆங் அவரு தான் இந்த கதைஎல்லாம் எழுதி டயலாக்கு எல்லாம் பேச சொல்லி கொடுப்பாராம் அவரு கூட கொஞ்சநாள் இங்கே இருந்தாரு. எப்பவும் எங்கள எல்லாம் உத்து பாத்திட்டு திரிவாரு. சில சமயங்களில சிரிச்சு எங்காளுங்ககிட்ட நல்லா பேசுவாரு.”
” சாமி நீங்க எந்த சீன்ல வந்தீங்க”
“நான் எங்கேப்பா படத்த பாத்தேன். அதான் சூட்டிங் முடிஞ்சு எல்லாரும் கிளம்பினப்போ. நான் போகலியே. இங்கே காசிலேயே கொஞ்ச நாள் இருக்கலாமுன்னு நினைச்சு இங்கேயே தங்கிட்டேன்”
“அப்போ நீங்க காசிக்கு வந்து கொஞ்சம் நாள் தான் ஆவுதுன்னு சொல்லுங்க” என்றான் ஆனந்த்.
” ம்ம் கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமாச்சுப்பா” என்றார். இன்னொரு வாட்டி நான் கடவுள் பாக்கணும் அதில் இவர் எங்கே வருகிறார்னு உத்துபாக்கணும் என்று நினைத்துக்கொண்டேன்.”
சாமி நீங்க இனிமே தமிநாட்டுக்கு வரதா ஐடியா இல்லியா” என்றான் ஆன்ந்த்
” இல்லப்பா அங்கே எங்கப்பா சாமியாருங்களுக்கு பாதுகாப்பு இருக்கு. போன வருஷம் ஒரு சாமியார போட்டோ புடிச்சு டி.வியில எல்லாம் காட்டிட்டாங்களாமேப்பா.”
ஆனந்த் சிரித்தான்.
(தொடரும்)
Entry filed under: tamil advertising. Tags: .



1.
anand | February 3, 2011 at 12:32 pm
சந்தோஷ், கதை நல்லாருக்கு. ‘நான் கடவுளின்’ காசி போர்ஷனில் வராட்டாலும் பூஜாவைப் பற்றி நாலு வார்த்தை நல்லா எழுது.
2. சாமியாரின் கதை | jeyamohan.in | February 19, 2011 at 6:24 pm
[...] கதையா பீலாவா என்று தெரியாத ஒரு பதிவு சந்தோஷின் இணையதளத்தில் கட்டுரையைப் [...]
3.
சாமக்கோடங்கி | February 19, 2011 at 10:58 pm
அடங்கா… கதை மாறியே தெரியல.. ரியலா இருக்கு.. ஆனா இந்த கேப்புல நீங்க பண்ணி இருக்கற போட்டோ கிராபிக்ஸ் வேலை கலக்கல்..
நன்றி..
சாமக்கோடங்கி..
4.
துளசி கோபால் | February 28, 2011 at 7:37 pm
ஆஹா….. லாட்டோவில் ஜெயிச்சுட்டீங்களா!!!!!
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.
5.
mohan | March 20, 2011 at 10:14 am
parava ellai….ungalal oru samitar vithaith irukiraar..
6.
ensanthosh | March 20, 2011 at 11:44 am
puriyala saaamiyov!